ந வின் நகர்ப்பயணம்.

....ந விலிருந்து நௌ வரை...

நடுநிசியில் ஒரு நாள்,
நாய் குரைக்கும் ஒலியில்,
நித்திரை கலைந்ததால்,
நீர்க்கோழி போல் மெல்ல,
நுனிக்காலில் அடியெடுத்து,
நூழை வழியே எட்டிப் பார்க்கையில்,
நெஞ்சுக்குள் பீதி சிம்மாசனமிட்டது...
நேரந்தெரியாமல் நெடுநெடுவென்று
நைந்த உடையுடுத்தி,
நொண்டிக்கொண்டே வந்து,
நோட்டம் பார்க்கும் உருவத்தின் கையில்
நௌகா பொம்மையொன்று இருக்கக் கண்டேன்...

பிறகுதான் புரிந்தது, மாலையில் கோயிலின் வாசலில் கைவினைப்பொருட்களை கலை நுட்பத்துடன் செய்து கொண்டிருந்த பேறுகுறைந்த ஆடவன் ஒருவனிடம், மூங்கிலால் ஒரு படகு பொம்மையை செய்து, வீட்டில் கொண்டு வந்து தரும்படி சொல்லி பணம் கொடுத்து வந்ததால், இரவென்றும் பாராமல் அவன் வீடு தேடி வந்திருக்கான் என்பதை..

நூழை - துவாரம், சன்னல்
நௌகா - கப்பல், படகு.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (9-Sep-13, 8:45 am)
பார்வை : 87

மேலே