விடுதலைக்கே தவிக்கிறோம் !

தாயே தமிழீழதாயே

உன்னைவிட்டு நெடுந்தூரம்

போகிறோம் !

முடிசூடும் மண்ணே

ஒருபிடி மண்ணின்றி மண்ணோடு

சாய்கிறோம் !

பொங்குநீரோடு நுரையாய்

கரைமோதும் கடலே

கரையேற்றும் படக்கோட்டியாய்

அலைகிறோம் !

ஏளனமாய் சிரிக்கும்

தறுதலைகள் பகையை

விடுதலை தகையில்

சரிக்கிறோம் !

ஒய்யாரமாய் ஓய்ந்திட

விடுதலையென்ன

கேலிக்கை கூத்தோ...

ஒடுங்கி ஒழிந்திட

ஈழமென்ன

உரிமையில்லா சொத்தோ...

மீண்டும்

பிறக்கிறோம் !

வதைத்த சிதைவிலிருந்து

புதைத்த விதையிலிருந்து

வலிதாங்கும் வேங்கையாய்

தளிர்கிறோம் !

விடுதலையென்றதுமே

வெடிக்கிறோம் !

இருந்தும்

வாழ்கிறோம் !

தலைவன் வருவானென்று

தமிழீழம் மலருமென்று

புலம்பெயர்ந்தும் தமிழராய்

பூக்கிறோம் !

உளமுண்ர்ந்து பட்டொளிவீசிடும்

புலிக்கொடியோடு கீதம்

படிக்கிறோம் !!

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (1-Jan-11, 7:55 am)
பார்வை : 335

மேலே