பேரினவாதம் .
மதமெனும்
மதுவருந்தி
மொட்டைடைத் தலை சொரிந்து
அதிலே
அட்டை
பேன் பிடிக்கும் !
கருணைக்
கடல் தாமென்று
கண்ணிமைக்கும்
கணப் பொழுதில்
மாட்டுக்காய்
தீக் குளிக்கும் !
எரிகின்ற
தீ யணைக்க
சிருபான்மையெனும்
சிற்றன்னை மார்பு அறுத்து
பால் தெளிக்கும் !
ஒரு பானைச் சோற்றுக்குள்
அவியமருக்கும்
ஒற்றை அரிசியாய் !
தூர் வாரப்படாமல் !