பேரினவாதம் .

மதமெனும்
மதுவருந்தி

மொட்டைடைத் தலை சொரிந்து
அதிலே
அட்டை
பேன் பிடிக்கும் !

கருணைக்
கடல் தாமென்று

கண்ணிமைக்கும்
கணப் பொழுதில்

மாட்டுக்காய்
தீக் குளிக்கும் !

எரிகின்ற
தீ யணைக்க

சிருபான்மையெனும்
சிற்றன்னை மார்பு அறுத்து
பால் தெளிக்கும் !

ஒரு பானைச் சோற்றுக்குள்
அவியமருக்கும்
ஒற்றை அரிசியாய் !

தூர் வாரப்படாமல் !

எழுதியவர் : -பிரகாசக்கவி - (15-Sep-13, 8:23 pm)
சேர்த்தது : prahasakkavi anwer
பார்வை : 44

புதிய படைப்புகள்

மேலே