சுற்றுலா செல்வோம் வாருங்கள்
சுற்றுலா செல்வோம் வாருங்கள்
இடங்களை சுற்றி பார்க்கலாம் வாருங்கள்
பற்றுதல் இல்லா வாழ்கையிலே நல்ல
படிப்பினை கற்போம் வாருங்கள் !
மனம்தனில் மகிழ்ச்சி உண்டாகும்
தினமதில் மனம் திளைத்துக் கொண்டாடும்
வனமதில் உள்ள இயற்கையழகு பார்க்க
வான்மதி போல கொள்ளை அழகு !
புத்தம்புது சிந்தனை சிந்தையில் உருவாகுமே
நித்தமதை நினைக்கையில் உள்ளமதில் மெருகேருமே
சத்தம்போட்டு குதித்தோடி விளையாடும் அருவிகளோடு அன்பு
யுத்தம் செய்து மனம் குளிர அருவியில் குளிக்கலாமே !
சுற்றுலா செல்வது வீண்செலவென்று எண்ணுவோரே
சுற்றுலா செல்வது செலவல்ல புத்தம்புது வரவு
சுற்றுலா செல்வது அலைச்சல் அல்ல புத்தம்புது அனுபவம்
சுற்றுலா குழந்தைகளின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அழகு !
********* தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன் .