ஐவிரல்கள் !!

தோழமைகளே !
ஐவிரல்கள் ஐம்பூதங்களாக
நம் கையில்..
பெருவிரல் தீ
சுட்டுவிரல் காற்று
நடுவிரல் ஆகாயம்
ஆழிவிரல் நிலம்
சிறு விரல் நீர்
எழுத்தாளனே !
முதல் இருவிரலை
செயல்படுத்து !
அடுத்த மூவிரலை
அடக்கு !
தீயுடன் காற்றை
இணைத்திடு !
நடுவே எழுதுகோலை
புகுத்திடு !
அதனுள் ஆறாவது
அறிவு ரசாயனத்தை
ஊற்றிடு !
சமுதாய தாள்களில்
சிந்தனையை
பற்ற வை !
அதோ ! எரிகிறது பார் !
அவலங்களும் ….
அட்டுழியங்களும் …..
```````````````````````````````````^ இரா. சந்தோஷ் குமார்