கவிஞன்
நான்
கள்ளிக்காட்டு கம்பனும் அல்ல..என்
கருத்துக்களை திணித்திடும் வம்பனும் அல்ல..
வார்த்தைகளுக்கு
வர்ணம் தீட்டி
வாலிபத்தின் அழகினை கூட்டி
வாழ்த்துக்கள் படிக்கும் வாலியுமல்ல...
காதலர்களின் மனதினில்
காதலை விதைத்துவிட்டு
கல்லறையில் துயிலும்
கண்ணதாசனும் அல்ல..
முகில்களை கட்டிவந்து
முகாரிராகம் படிக்கும்
முத்துலிங்கமும் அல்ல..
காவிரி ஆற்று நீருடன்
கற்பனை ஊற்றினை கலந்து
கவிபுனையும்
காமராசனும் அல்ல..
சொற்களை அளந்து
சோகத்தை பிளந்து -கவி
சொல்வேன் நேர்த்தியாக..என்றும்
வாழ்வேன் மக்கள் மனதில் கீர்த்தியாக...