இயல்பான கொடையிது

பருவங்கள் மாறாது
பருவத்தே நடந்திட்டால்
உருவங்கள் மாறாது
உண்மைகளே நிகழ்ந்திடும் !
மழையும் பொய்க்காமல்
மும்மாரி பெய்திட்டால்
பசுமையும் நிலைத்திடும்
பாலையும் சோலையாகும் !
விளைநிலங்கள் விற்காது
விற்காமல் நிலைத்திட்டால்
விளைந்திடும் நெற்கதிரும்
விளைச்சலும் நிலையாகும் !
பசுமையின் பேரழகை
கண்டிடுவீர் படத்தினில் !
வரைந்த ஓவியமல்ல
நிலைத்த விளைநிலமே !
இயற்கை வழங்கிட்ட
இயல்பான கொடையிது !
இருப்பதை ரசித்திடவோ
இருவிழிகள் போதாது !
பழனி குமார்