நன்றி மறப்பது நன்றன்று!
நன்றி மறப்பது நன்றன்று!
இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டு இருந்தபோது
தண்ணீர் குடிப்பதில் சண்டை வந்தது. அதில் ஒருவன் இன்னொருவனை அடித்துவிட்டான்.
அடி வாங்கியவன் அழுதுகொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான்.
சிறிது நேரம் கழித்து ஓரிடத்தில் ஆழமான பள்ளத்துக்குள் தவறி விழப்போனான் அவன்.
சடாரென ஓடிவந்த நண்பன் உயிரைப் பணயம் வைத்து அவனைக் காப்பாற்றினான்.
இப்போது நண்பன் அருகில் இருந்த பாறையில் செதுக்கி வைத்தான். ‘என் நண்பண் என்னைக் காப்பாற்றினான்’ என்று.
-நன்றி! முக நூல்