கனவுகள்

தெளிவில்லாத நீரில்
முகம் தெரியாது ,
ஒளி இல்லாத விளக்கால்
இருள் போகாது
உவர்காத கடல் நீர்
உப்பாகாது
உரசாத தீக்குச்சி
நெருப்பாகாது
கருக்காத வெண்மேகம்
மழையாகாது
செதுக்காத மலைக்கல்லும்
சிற்பமாகாது
முயற்சி இல்லாத கனவுகள்
வெற்றியாகாது ....


எழுதியவர் : (10-Jan-11, 5:09 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 476

மேலே