தேவதை
தூக்கம் வராத இரவுகளில்
தேவதையை நினைத்து கொள்வேன் ...
வெண் பஞ்சு உடையணிந்து ,
குழந்தை போல் சிரித்து
கூட்டம் கூட்டமாய் ஒடியாடி,
கிரீடக்கள் மின்ன
விரல் இடுக்கில் பட்டாம்பூச்சிகள்
படபடக்க ..
பறக்க விடுவாளா ? என மனம்
பதை பதைக்க
சிறகு விரித்து அவளே பறந்தாள் ....
அவள் நறுமணம் எங்கும் பரவ
நானும் நித்திரை கொள்வேன் என்னை மறந்து..
பாவம் தேவதை ...
அவள் தூங்கி
நான் பார்த்ததேயில்லை ..
அவளுக்கு
தூக்கம் வராத இரவுகளில் ??