நினைவோடையில் நின்றோர் நீலநிறப் பூங்குயில் கீதம் பாட

நினைவோடை யில்நின்றோர் நீலநிற பூங்குயிலும்
மனதைவரு டும்கீதம் மாலைநிலா வில்பாட
எனைமறந்து இனிதான ஏகாந்த மனவெளியில்
உனதுநினை வின்மென்மை உணர்வலைதன் னில்மிதந்தேன்

----நினை மன எனை உன எனும் ஒரே அடி எதுகையும்
அடிதோறும் காய் காய் காய் காய் என்னும் ஒரே வாய்ப்பாடும்
1 3 ஆம் சீரில் நி நீ ம மா எ ஏ உ உ எனும் சீர் மோனையும்
அளவடியில் அமைந்து பொலியும் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-24, 5:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2

மேலே