அன்பே செய்

அன்பெனும் நதியை தேடி !!!
உயிர் பாயும் அவ்விடம் நாடி !!!

பெறாதவர் இங்கு கோடி !!!
பெற்றவர் சிலர் பெறும் இன்பம் கோடி !!!

இதற்கு இல்லை விலை கோடி !!!
அறியா மானிடர் பல கோடி !!!

கொள்வோம் பலர் மனம் அன்பால் !!!
வைப்போம் அதிலே உயிரும் !!!

நேசம் கொள்ளும் ஜீவன் !!!
அன்பாய் இருக்கும் நாளும் !!!

அன்பே பெருகட்டும் இன்று !!!
நதியாய் பாயட்டும் என்றும் !!!

புவியும் குளிரும் நாளும் !!!
உயிர்கள் பெருகும் எந்நாளும் !!!

இனி ஓர் உலகம் செய்வோம் !!!
விதையாய் அன்பை விதைப்போம் !!!

என்றும் அன்புடன் அரவிந்த்

எழுதியவர் : R S Arvind Viknesh (16-Oct-13, 11:52 am)
பார்வை : 117

மேலே