விவாக ரத்து

அன்று தலைவன்
ஆட உருண்டது உலகம்
இன்று இருவரும்
ஆட உருளுது உலகம்

துடைப்பது யாரு?
தெளிப்பது யாரு?
கோலமிடுவது யாரு?
சமைப்பது யாரு?
துவைப்பது யாரு?
குழப்பம் இருவருக்கும்....

குழந்தை இல்லை
குற்றம் உன்னது
குறைகள் உன்னது
சேர்ந்தால் தானே
சேயும் உண்டு...
குழந்தை உண்டு
வளர்ப்பது யாரு?
ஆளாக்குவது யாரு?
நீயே பாரு....

ஆணுக்கு பெண் அடிமை
அந்த ஆணையும் பெற்று
தருவது பெண்மை.....

தினமும் திருவிளையாடல்
சிலநேரம் தெருவிளையடல்
அவமானம் தலைகுனிவு
முடிவு...சுபம்.
விவாக ரத்து

வெற்றி இருவருக்கும்
தோல்வி வருங்கால
சந்ததியருக்கு...

எழுதியவர் : ச கே murugavel (21-Oct-13, 11:54 am)
பார்வை : 90

மேலே