கண்ணீர் எழுதும் கடிதம்
அன்பே...
என் காதல் செய்த
சோதனையில்!
என் உள்ளம் கொண்ட
வேதனையில்!
என் கனவில் கரைந்த
கற்பனையில்!
என் நினைவில்
நீ நிலையாய் நின்ற
சாதனையில்!
கண்ணீர் எழுதும்
கடிதம் உனக்கு!!!
அன்பே...
நான் இரவில்
தூக்கத்தை மறந்து
உன் கனவில்
வாழ்தேன்!!
நான் பகலில்
என் நினைவை மறந்து
உன் நினைவில்
வாழ்தேன்!! - இப்படி
உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு நிமிடமும்
ஒரு நாள் ஆனது!
நாட்கள் வாரமானது!!
வாரம் மாதமானது!!!
மாதம் வருடமானது!!!!
வருடம் யுகமானது!!!!!
இப்படி எல்லாம் வாழ்ந்த - நான்
எப்படி உன்னை மறந்து வாழ்வது
என்னை இழந்து உன்னில்
வாழ்ந்த நான் - எப்படி
உன்னை மறக்க முடிவும்
சொல் அன்பே சொல்!!!
அன்பே....
உனக்கு வேறொருவன் உடன்
திருமணம் என்றதும்....!!!!
எப்படி தாங்கும் என் இதயம்!!
எப்படி மூடும் என் இமைகளும்!!!
அப்படி திருமணம் நடந்து விட்டால்
என் உடலை விட்டு
என் உயிர் பிரிந்து விடும்.
உயிர் பிரிந்தாலும்....
உன்னை சுற்றி உள்ள காற்றை
நிறுத்தி விட்டு - நான்
காற்றாய் வாழ்திருப்பேன்!!! - அதில்
உன் நினைவுகள்
ஊற்றாய் சுரந்திருக்கும்!!!
நீ சூடும் பூக்களில்
வாசமாய் வாழ்திருப்பேன்!!!
உன் வசமே சார்ந்திருப்பேன்!!!
நீ போகும் பாதையில்
பூவாய் விழுந்திருப்பேன்!!!
உன் நிழலாய் தொடந்திருப்பேன்!!!
அன்பே...
நான் இறந்தாலும்
எனக்காக கண்ணீர்
சிந்த வேண்டாம்....!!!!
உன் கண்ணிலிருந்து
நீர் வழிந்தால் - என்
இதயத்திலிருந்து இரத்தம்
கொட்டும்...
உன் கூந்தலில் வைத்த
வாடி போன ஒரு பூவை
என் கல்லறையில்
போட்டால் போதும்....
என் ஆத்மா
சாந்தி அடையும்....
மீண்டும் பிறவி ஒன்று
இருந்தால் நான் உனக்காக
பிறந்து வருவேன்!!!
உன் காதலுகாக காத்திருப்பேன்!!!!
நீ எப்பொழுதும்
கண்ணீர் சிந்தாமல்
உன் சிரிப்பில்
சந்தோசம் மட்டும்
சிந்தி வாழ என் கண்ணீரை
பூவாய் ஆக்கி நீ வாழ வேண்டும்
என்று ஆசிர்வாதம் செய்கிறேன்
வாழ்க நலமுடன், வளமுடன்
என்றும் என்றென்றும்....!!!