தாயே

தாயே!!
உறவுகள் ஆயிரமாயினும்
உன்னதமானவள் நீயே.
கருவில் சுமந்தவளே
கவிகளின் கருப்பொருளே.
பத்துமாதம் எனை நீயே
பத்திரமாய் சுமந் "தாயே"!

உன்கையால் சோறுண்டால்
நாவில் சுவை நர்த்தனங்கள்
தூரக்குரல் கேட்கையிலும்
செவிதனிலே கீர்த்தனங்கள்.

தாலாட்டும் உன்மடியில்
தலைவைத்து நான்தூங்க
அவனியிலே உள்ளதெல்லாம்
அற்பமாய் போனதம்மா!

உலகினிலே உனக்கீடாய்
உறவொன்றும் நானறியேன்
உனதன்பின் பாத்திரமாய்
எனை நானும் தாழ்த்திடுவேன்.

எழுதியவர் : Bala (25-Oct-13, 1:17 pm)
பார்வை : 116

மேலே