நிலாச்சோறு

இன்றைய இரவுகளில்
வான்நிலவும் பசியெடுத்து
பட்டினியாய் கிடகிறது !

சோறு பிசைந்தெடுத்து
கவளம் கவளமாய்
அள்ளி அள்ளி ஊட்டிவிடுகிறேன்

என்னை போலவே நிலவும்
ஒப்பாரிவைத்தழுகிறது

அம்மா நீ ஊட்டியசோற்றின்
அன்பெனும் அட்சய பாத்திரம் இன்றி!

எழுதியவர் : பிரகாசக்கவி - (26-Oct-13, 1:00 am)
பார்வை : 124

மேலே