காதல் இதுதானோ-3

காதலில் நாட்கள் நகர்வது மின்னல் வேகத்தில் அல்லவா.. அப்படி ஒரு நாளில் அவன் அவளை அழைத்தான்..

மது.. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..

“தினம் தினம் பேசிட்டு தானே இருக்கோம்.. இன்னைக்கு மட்டும் அப்படி என்ன விசேஷமா பேசிட போற?”

மது.. புரிஞ்சுக்கோ.. இது நம்ம வாழ்க்கை பத்தின விஷயம்..

“நம்ம வாழ்க்கையா? ஹலோ தம்பி.. நீ வேற நான் வேற..”

உன் தம்பியா இருக்க எனக்கு விருப்பம் இல்ல..

“அப்போ அண்ணனா?”

உன்னை மணமுடிக்க போகின்றவன்..

“அனாவசியமா பேசாதடா.. உன்னை விட வயசில் சின்னவளாய் இருந்தாலும், நீ இளங்கலை பட்டம் பெற படிக்கும் அதே கல்லூரியில் நான் முதுகலை பட்டத்திற்காக படிக்கிறேன்..”

என் மனசு உனக்கு புரியலையா? ஏன் என்னை தினமும் கொல்கிறாய்?

“நான் சொல்லுறத புரிஞ்சுக்கோடா.. எனக்கு உன்னோட நல்ல குணம் பிடிக்கும்.. உன் பேச்சு பிடிக்கும்.. “

எல்லாமே பிடிக்கும்.. ஆனா என்னை மட்டும் பிடிக்கலையா?

“பிடிக்காது..”

சத்தியம் பண்ணு..

“இது பெரிய விஷயமா? இதோ இப்பவே பண்ணுறேன்.. சத்தியமா உன்னை எனக்கு பிடிக்கல..”

என் மேல சத்தியம் பண்ணு..

உன் மேல.. சத்திய..

வார்த்தைகள் தடுமாறின அவளுக்கு.. ஏதோவொன்று அவளை தடுத்தது.. மௌனம் காத்தாள் அவள்..
உற்சாகம் பொங்கிட துள்ளினான் அவன்.. அருகில் இருந்த குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சினான்..

இது போதும் மது.. இனி நீ எதுவும் சொல்ல வேண்டாம்..

“ஏன்? அப்படி என்ன நடந்துவிட்டது?”

உன் மனசுல எனக்கு இடம் கிடைத்து விட்டது செல்லமே..

“இல்லை.. வீண் கற்பனை வேண்டாம்..”

I love you மது..

காதல் சிந்தி தெறித்த அவன் பேச்சு அவளை என்னவெல்லாமோ செய்தது.. உறக்கம் தொலைத்தாள் அவள்.. கனவு கூட வருவதற்கு இடமளிக்காமல் அவன் நினைவுகள் அவளை வாட்டின..

மறுநாள் காலை விழித்ததும் அவன் நினைவுகளோடே.. ஏன் இந்த தடுமாற்றம்? உண்மையில் எனக்கு அவனை பிடிக்குமோ? பிடித்தால் மட்டும் என்ன? நடக்காத விஷயமல்லவா இது.. தன்னை தானே கேள்விகளால் சுற்றி வளைத்து போர் தொடுத்தாள் மது..

தெளிவு பிறந்தவளாக அன்று காலை அவளே அவனை அழைத்தாள்..

"ஹலோ"

சொல்லு மது..

“என்ன பண்ணிட்டு இருக்குற?”

அதை விடு மது.. நீ என்ன பேச அழைத்தாயோ அதை முதலில் சொல்லு..

“அப்படி எதுவும் இல்லை..”

நீயாக என்னை அழைத்திருக்கிறாய்.. எதோ இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேறென்ன வேண்டும்... பொய் சொல்லி என்னை வாட்டுவதில் அப்படி என்ன சந்தோஷம் உனக்கு?

“பொய் தான்.. ஒத்து கொள்கிறேன்.. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..”

சொல்லு கண்ணே.. உனக்காக மட்டுமே காத்திருக்கிறேன்..

தொடரும் காதல் பயணம்... :)

எழுதியவர் : மது (28-Oct-13, 7:44 pm)
பார்வை : 262

மேலே