கைதி
என் பேனா ஏதேதோ எழுத துடிக்கிறது
என் மனதோ அதை மறுத்து
உன்னை மட்டுமே எழுத கட்டளையாய் சொல்லுதே!கவிதையானாலும் கதையானாலும்
வரலாறு ஆனாலும் என் வாழ்க்கையானாலும்
எதனை எழுதி முடித்தாலும் அதில் உன்
முகம் மட்டும் தான் மிச்சம்.
ஏனோ இந்த பேனா என் கையில்
சிறைப்பட்டதோ? பாவம்.........