நீ வேண்டும் எனக்கு என் கணவா
வேண்டும் நீ எனக்கு
ஆயிரம் சொந்தங்களிருந்தும்
எனக்கென வேண்டும் நீ எனக்கு
கண்ணீர் துளிகளை உன் உதடுகளால்
துடைத்திட வேண்டும் நீ எனக்கு
உன் கோவ கதிர்கள் என் மீது பட்டு நான்
தொட்டாற்சிணிங்கியாய் சுருங்கும் போது
உன் கரங்களினால் தென்றலாய் என்னை
தழுவிட வேண்டும் நீ எனக்கு
இரவுகளின் தனிமைகளை
போக்கிட வேண்டும் நீ எனக்கு
அது எனக்கு மட்டும் மகிழ்வை தர
வேண்டுமென்பதற்கில்லை
இரவின் ஒவ்வொரு நொடியினையும்
இருவரும் சேர்ந்தே ரசித்திட
வேண்டுமென்பதற்கே.
கைகளிரெண்டிலும் வளையல்கள்
மாட்டிட வேண்டும் நீ எனக்கு
அது கைகளை அழகூட்ட
வேண்டுமென்பதற்கில்லை
ஊடலிலும் கூடலிலும் அவை
உன் நெஞ்சோடு மோதி இசைக்கின்ற
இசையை கேட்டிட வேண்டுமென்பதற்கே.
விரல்களில் மருதாணி
பூசிட வேண்டும் நீ எனக்கு
அது சிவப்பதை பார்க்க
வேண்டுமென்பதற்கில்லை
உறக்கத்தில் என் விரல்களால்
உன் மீது நான் வரைந்திட்ட
கிறுக்கல்களை கண்டிட வேண்டுமென்பதற்கே.
என் கண் இமைகளில்
மையிட வேண்டும் நீ எனக்கு
அது உனக்கு அழகாய் தொ¢ய
வேண்டுமென்பதற்கில்லை
மையிடும் வேளையிலே
உன் கண்களில் என்னழகை
பார்த்திட வேண்டுமென்பதற்கே.
பிரசவ நேரத்தில் என்னருகே
இருந்திட வேண்டும் நீ எனக்கு
அது எனக்கு ஆறுதல் அளிக்க
வேண்டுமென்பதற்கில்லை
என் விரலோடு விரல் கோர்த்து
உன் விழிகளினால் என் வலியினை நீ
வாங்கி கொள்ள வேண்டுமென்பதற்கே.
நம் உறவிற்கு நீ கொடுத்திட்ட
பரிசை உன் கரங்களில் ஏந்தி
காட்டிட வேண்டும் நீ எனக்கு
அது உன் உரி¡¢மையை காட்டிட
வேண்டுமென்பதற்கில்லை
அத்தருணத்தில் என் முதல்
குழந்தைக்கு என் கண்களினால்
நன்றி சொல்லிட வேண்டுமென்பதற்கே.
முப்பெய்து தோள் சுருங்கி முதுமை
அடைந்தாலும் வேண்டும் நீ எனக்கு
அது ஒருவருகொருவர் துணை நிற்க
வேண்டுமென்பதற்கில்லை
இருவரும் சேர்ந்து குழ்ந்தைகளாய் மாறி
நாம் தொலைத்திட்ட இளைமையை
தேடிட வேண்டுமென்பதற்கே.
மொத்ததில் நான் வாழ்ந்திடும்
நாட்கள் அனைத்திலும் எனக்கே
உரியவனாய் வேண்டும் நீ எனக்கு
வருவாயா என் அன்பு கணவா ????????