குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்...

இந்தியாவின்
இரும்புப் பெண்மணி
இந்திரா பிரியதர்சினியை
மகளாய் பெற்றவர் யாரு ?

மோதிலால்நேரு சொரூபராணி
இவர்களின் மகனாய்
அலகாபாத்தில் அவதரித்தவர் யாரு ?

உருதுவில் 'சிவப்பு நகை' என
பொருளுடைய ஜவஹர் இலால் எனும்
சொல் போல் மேனி சிவந்தவராம்
ஜவஹர்லால் எனப்
பெயர் கொண்டவராம்
எங்க மாமா நேரு...

அடிமை இந்தியாவை மீட்க
பாடுபட்ட பல பல்லாயிரம் நூறு
வீரர்களில் ஓர் ஏறு
எங்க மாமா நேரு...

விடுதலை இந்தியநாட்டின்
முதல் பிரதமர் அவர்
சட்டம் படித்த அறிஞரவர்
புதுத்தொழில்
திட்டம் வகுத்த தலைவரவர்
குழந்தைகளிடம் அளவற்ற
அன்பு கொண்டவரவர் போல்

எங்கள் இந்தியநாட்டின்
வளரும் குழந்தைகள்
பட்டம் பல பெற்றிடவும்
சட்டம் பல இயற்றிடவும்
திட்டம் பல தீட்டிடவும்
குடும்ப பாரம் சுமக்கும்
'குழந்தைத் தொழிலாளர்' எனும்
சாபக் கேடு ஒழிந்திடவும்.....
......
மனம் மணக்கும் சிரிப்புமலர்
ரோஜா குழந்தைகளை
இதயச் சட்டையில் பதித்த
நேரு மாமாவை நினைந்து
நாட்டின் எதிர்காலத் தூண்களாம்
குழந்தைகளை
உயிர் கண்களாகப் போற்றியே
நவம்பர் 14 இல்
கொண்டாடுகின்றோம் ஆண்டுதோறும்
'குழந்தைகள் தினம்'...!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (14-Nov-13, 2:34 pm)
பார்வை : 197

மேலே