ஒரு பயணம்
ஓர் இரவு....
நீண்ட தூரம் பயணிக்க ஓர் ஆசை...
என் இரு சக்கர வாகனம் எடுத்து
செல்ல நினைத்தேன் துளி தூரம் தனிமையில்...
செல்லும் வழியில் என்னுடனே வந்த மழைத்துளிகள்
பல முறை கடந்த பாலங்கள்...
எப்பொழுதும் செல்லும் சாலை...
அத்தனையும் புதுமையாய் ஓர் உணர்வு...
சலனங்கள் இல்லா ஓர் அமைதி...
என் வாகன சப்தமும் சங்கீதமாய் கேட்க,
யாரும் இல்லா தனிமையில்
திடிரென ஓர் வெளிச்சம்,,,
தலை தூக்கி பார்க்கையில்
அங்கே என் தோழி
பெயர் நிலா.....
அவசர அவசரமாய் என்னை கடந்த வாகனங்கள்
அவசரமில்லாமல் நான் அவைகளை ரசித்திட
எதோ புரியா ஓர் உணர்வு
சில்லென்ற தென்றல் என் மேனியை உரச
சுற்றிலும் இயற்கை
அவைகளை இருட்டினில் ரசித்திட
அந்த ரசனையும் ஆனந்தமே....
நான் கடந்த கோவில்கள்...
நான் பார்க்காமல் அவர்களும் பார்க்காமல்,
என்னை கடந்த முன்பின் அறியா மனிதர்கள்...
புதுமையாய் தோன்றியது என்னுளே...
இயந்திரமான இந்த உலகில்
எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு...
இயற்கையை ரசிக்க அல்ல
அவர்கள் அருகில் இருப்பதை ரசிக்க...
இன்னும் இன்னும் எழுத தோன்றும் இப்பயணம்..
காரணங்கள் இல்லை...
மறக்க இயலா ஓர் அனுபவம்..
நானும் என் வாகனமும் மட்டும்
அனுபவித்த ஓர் இனிமையான அனுபவம்...