ஆண்டவா இவன்கூட திரும்பியுமா
நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்...
நண்பன் 1 :"டேய் மச்சி ... எப்படிடா இருக்க??"
நண்பன் 2:"நல்லா இருக்கேன்டா ... நீ எப்படி இருக்க?"
நண்பன் 1 :"ரொம்ப நல்லா இருக்கேன்டா ... மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா .."
நண்பன் 2 :"அப்படியா?"
நண்பன் 1 :"ஆமாடா ... நான் சொல்லியிருந்தேன்ல ஒரு பொண்ணை ரூட் விடுறேன்னு ... அது செட்டாயிரும் போலிருக்குடா ...
நல்ல வசதியான இடம் ... ஒரே பொண்ணு .... சும்மா உட்கார்ந்தே ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம்டா"
நண்பன் 2 :"ம்ம்ம்......."
நண்பன் 1 :"இப்போ எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்டா"
நண்பன் 2 :"சொல்லுடா பண்றேன்"
நண்பன் 1 : "நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் ... என்ன கொடுக்கலாம் ... நீ கொஞ்சம் சொல்லேன்"
நண்பன் 2 :"உனக்கு சொல்லம யாருக்குடா சொல்ல போறேன் ? என்னோட போன் நம்பரை கொடுடா"
(("டமார்"னு ஒரு சத்தம் ... போனை உடைச்சிட்டானோ!))