இடுப்பு
இடுப்பு..!
அந்தச் சேலையோடு மறைந்திருக்கும்
செம்மண் நிறத்து பள்ளங்கள்
என்னை மயக்கும் சூசகமோ..?
மெல்ல மெல்ல
என்னை நான் இழந்து
உன்னில் என்னை ஒளித்துக் கொள்ள
வேகம் எழும்புகிறது....
அந்த வளைவுகளைத் தொலைக்க
வந்த வரவு நான்...!
இப்போது உன்னை அதிகமாக நேசிக்கிறேன்
வளைவுகள் வளர்வதைக் கண்டு
வானம் எனக்கு பாதைவிரிக்கிறது...
என் விரல் பிடிக்கவும்,
உன் இடுப்பில் இடம் பிடிக்கவும்
உருவாகிறது ஒரு ஜீவன்....
நம் உதடுகள் ஒன்று சேர்ந்து
முத்தங்களை பகிர்ந்தளிக்கட்டும்,
பாசத்தோடு பாலனின்
இரண்டு பக்க கன்னங்களிலும்...!
வஞ்சனை இல்லாமல்
வயிறு நிரப்பி,
வஞ்சனை அறியும் அறிவை கொடுப்போம்
வருவாயா நீ அருகினிலே....!