எங்கிருந்தோ பாடும் குரல்

எங்கிருந்தோ பாடும் குரல்
என் செவித் தொடுவதென்ன?
இங்கிருந்து தேடும் நெஞ்சம்
அங்கு வுன்னைக் கூடாதென்ன?

உன் பாட்டுக் கேட்ட பின்னே
என் பாட்டு மறந்தேனே?
என் னவங்கே நடக்குதடா ?
என் னெஞ்சம் புலம்புதடா!

அக்கம் பக்கம் பார்க்க வேண்டாம்.
அடுத்த பேச்சுக் கேட்க வேண்டாம்.
பொழுது போக்கு லீலையவை
பொருட்டாக்கிக் கொள்ளவேண்டாம்.

வெட்டிக்கூட்டம் வீண் கேலி
சுட்டிச்சொல்லும் தீயும் மொழி
பட்டாலும் தட்டித்தள்ளி
விட்டு ஏகு சேரும் வழி!

சண்டைக் குணம் சாசுவதம்
கொண்டதவர் பிறவித்தனம்.
மண்டையதுப் பாழும் மடம்
தண்டம் அதுக் காலிக்குடம்.

உனக்கும் ஒரு எல்லைக்கோடு
கணக்கு அதைத் தேடி ஓடு!
பிணக்குகளைப் புரட்டிப்போடு
எனக்குமுந்தித் தொட்டுத் தொடு!

கொ.பெ.பி.அய்யா

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (21-Nov-13, 7:52 pm)
பார்வை : 223

மேலே