கணக்கு

என்ன கோபம் உனக்கு என்னிடம்
பாரதியை பிடிக்கும் என்பதாலா ?
எனக்கும் பிணக்கு உன்னிடம்
எங்கு விட்டாய் என்னை நிம்மதியாய் ?
விடாக்கண்டனாய் துரத்தி தானே வந்தாய் !
இளங்கலை ,முதுகலை என்று ,
உன் தீராக்காதல் புரிந்திருந்தால் .........
உன்னை நான் மேல்நிலையிலே படித்திருப்பேனே உனக்கு ஏன் இந்த ஒரு தலைக் காதல் என் மீது
விருப்பமிலா பெண்ணை விரட்டி வரலாமா ?
விடலைப் பையன் கணக்கே !
நீ தான் அறிவியியலின் ராஜாவாம்
எனக்கு என்னவோ நீ அறுவைகளின் ராஜா !

எழுதியவர் : கலை நாகராஜ் (26-Nov-13, 1:13 pm)
சேர்த்தது : Kalai Selvi
Tanglish : kanakku
பார்வை : 109

மேலே