நீ இல்லாத இதயம்

கண்களால் எழுதப்பட்டு
மனதால் இணைக்கப்பட்ட
இருவரின் இதயத்தால்
உருவான காவியமோ..!!!

கண்களால் விளையாடப்பட்டு
மனதால் வெல்லப்பட்ட
இருவரின் நேசத்திற்கிடையில்
உருவான போட்டியோ..!!!

கண்களால் செதுக்கப்பட்டு
மனதால் உயிர் பெறப்பட்ட
இருவரின் உயிரால்
உருவான உயிர் பெற்ற சிற்பமோ..!!!

கண்களால் விதைக்கப்பட்டு
மனதால் வளர்க்கப்பட்ட
இருவரின் புரிதலில்
உருவான அன்பின் பயிரோ..!!!

நீ இல்லாத இதயம் இங்கில்லை
நீ இல்லாவிட்டால் அங்கு இதயமே இல்லை..!!

எழுதியவர் : (27-Nov-13, 11:07 am)
Tanglish : nee illatha ithayam
பார்வை : 227

மேலே