கலஞ்சி போன​ காதல்

ஒட்டுக் கழண்டு,
ஒரு வருஷம் ஆயிடிச்சி...

கண்டவன் பேச்சலாம்,
காதுல வாங்கினியே,
உன்ன,
கட்டிக்கப் போறவன் பேச்ச,
கணக்கிளையும் எடுகிலியே...

வெளுத்ததெல்லாம் பாலுன்னு,
வெகுளியாவே இருந்திடியே,
நறுமணம் இல்ல,
நஞ்சுமனம் அவனுன்டன்,
அதையும் நீ கேக்களியே...

அவங்க சொன்னாங்க,
இவங்க சொன்னாங்கண்டு,
அழுதுகிட்டே இருந்தியே,
ஆயிசு முழுதும்,
நாமங்கிறத,
அந்த நேரம் மறந்திட்டியே...

மத்தவங்கள,
மறக்காம மதிச்சியே,
மனசுக்குள்ள இருகிறவனும்,
மனிசந்தான்,
என்கிறத மறந்திட்டியே...

முழுசா நம்பித்தானே,
மூணு வருசமா பழகின,
மூணே நிமிசத்தில,
நாளக்கி,
மோதிரம் மாத்திரன்டு போயிட்டியே...

மழ மேகத்தில,
சூரியன் மறஞ்சிருக்குமே தவிர,
அழிஞ்சி போறல்ல,
பொய்யால,
உண்ம மறஞ்சிருக்கும்,
அழிஞ்சி போறல்ல...

இன்னொரு வருஷம் போதுமா,
ஒவ்வொன்னுத்தையும் எழுத,
ஒரு சிலத மட்டும்தான் எழுதிறன்,
ஒரு தடவ மறக்காம நினச்சி பாரு...

எழுதியவர் : முஹம்மது நப்ரிஸ் (27-Nov-13, 9:13 am)
சேர்த்தது : Nafrees
பார்வை : 88

மேலே