சரணம் சாஸ்தா

பரவிய வெளிச்சத்தில் சிறு நிழல் உருவம்.
படர்ந்து மலர்ந்து தொடுகிறது - உன் பாதத்தை . . .
மருவிய இருளில் சிறு வெளிச்சம்.
ஒடிந்து மடிந்து பிரகாசிக்கிறது - உன் உருவத்தை . . .
சாமியே சரணம் ஐயப்பா.!

வெற்றிகள் பல வந்தாலும்...
தோல்விகள் படிகளாய் அமைந்தாலும்...
அனைத்தும் நீ தந்தது...உன் பரர்வையில் உருவானது.

உன் நிழல் என் இருப்பிடம்,
உன் பாதம் என் சரணாலயம்.
சரணம் சாஸ்தா ... சாமியே சரணம் ஐயப்பா.

எழுதியவர் : தங்கம் (28-Nov-13, 10:34 am)
பார்வை : 139

மேலே