இங்கிவனை யான் பெறவே

உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்
மிகச் சிறந்த ஆயுதமாய்
இன்றைய கல்வி மாறியபின் ............!

குண்டுச் சட்டிக்குள்
குதிரையோட்டும் தன்மை விடுத்து,
மீனைக் கொடுப்பதை விட
மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்
உங்கள் செல்வப் பிள்ளைகளுக்கு......!

சொத்துக் குவித்து
பிள்ளைக்குக் கொடுப்பதைவிட
பன்மொழி சார்ந்த
கல்வியை அளித்திடுங்கள்
எதிர்காலம் பிரகாசமடைய ......!

போட்டி நிறைந்த உலகத்தில்
ஆளுமை தன்னை வளர்த்து,
பன்மொழி தெரிந்த அறிஞனாகி
`இவன் தந்தை இவனைப் பெற
என்ன தவம் செய்தானோ எனும்
பெருமையை அளிப்பதே பேறல்லவா..!!!
--------------------------------------------------------------------

எழுதியவர் : சுசானா (4-Dec-13, 12:58 am)
பார்வை : 108

மேலே