எல்லை இல்லை
எழுது,
கை வலிக்கும் வரை அல்ல,
நீ எழுதியதை படிப்பவரின்
எண்ணம் மாறும் வரை ....
பேசு,
வாய் வலிக்கும் வரை அல்ல,
அதை கேட்பவரின்
சிந்தனை மாறும் வரை ....
போராடு,
சோர்வு உன்னை சந்திக்கும் வரை அல்ல,
வெற்றி
உனது சிரசை அலங்கரிக்கும் வரை ....
அலைகள் இல்லாமல் கடல் இல்லை,
தோல்வியை சந்திக்காமல் வெற்றி இல்லை,
போராட தெரியாமல் இருக்காதே,
துணிந்து நில்,
வெற்றியை என்றும் முத்தமிடு .....