thozhi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  thozhi
இடம்:  நாகர்கோயில்
பிறந்த தேதி :  13-Apr-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Oct-2011
பார்த்தவர்கள்:  435
புள்ளி:  308

என்னைப் பற்றி...

இப்படிதான் வாழ வேண்டும் என்று நினைப்பவள் .....
தமிழ் என்னும் காட்டில் துள்ளி திரியும் ஒரு புள்ளி மான் ......
நான் தமிழை நேசிப்பவள் அல்ல ...
அதை சுவாசிப்பவள் ....

என் படைப்புகள்
thozhi செய்திகள்
agan அளித்த படைப்பில் (public) செல்வா பாரதி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2013 12:54 pm

வணக்கம் தோழர்களே...

2014ஆம் ஆண்டின் முதல் விருதென ,"வளர் மென்பா கவிசெம்மல்-2013 "எனும் விருது இருவர்க்கு அளிக்கப் படுகிறது...

பிரிசில்லா எனும் ஒரு படைப்பாளி தளத்தில் வந்த நாள் முதல் அவரின் படைப்புகள் எனது கண்களின் விரிப்பில் ..நல்ல ஆக்கம் அவரிடம் உள்ளது எனக்கு மகிழ்ச்சி...இவர் நிறைய வாசிக்க வேண்டும் உறுதியாய் கவிதை உலகில் நல்ல முன்னேற்றம் இவர் அடைவார் இவரைப்போல் தோழர் சுதா
யுவராஜ் நல்லதொரு படைப்பாளியாக தளத்தில் வளம் வருவது மகிழ்ச்சியே...

**************************************************************************
தோழர்கள்
@@@@@@@@ பிரிசில்லா @@@@@@@@@

@@@@@@ சுதா யு

மேலும்

Vazhthukal thozhamai galey :) 25-Oct-2014 8:24 am
வாழ்த்துக்கள் தோழமைகள் இருவருக்கும் ... 24-Oct-2014 10:48 pm
தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கின்றேன் தோழமையே 08-Jan-2014 11:21 pm
ஆஹா . மிக்க மகிழ்ச்சி . இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள். 08-Jan-2014 11:17 pm
lakshmi777 அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 10:20 am

குழந்தை இல்லாதவர்கள் குழந்தையை தத்து எடுப்பது சரியா ?

மேலும்

தத்து எடுக்கலாம் தான் தத்துக்குழந்தை என்ற உண்மை தத்துக்குழந்தைக்கு தெரிந்தும் இருக்க vendum குழந்தை illathavarkal அனாதைக் குழந்தைyai thaththu edupathu siranthathu குழந்தை ullavarkal edukkum போது பல sikkalkal வர வாய்ப்புண்டு தாய் தந்தை thangal kulanthayaka etpinum matta kulanthaikal eetkavidin siranthathalla அதை karuthil kollavendiyathu avashiyam 25-Dec-2013 11:07 am
thavaru tholi nichayamaka edukalaam ethirkala pirachanai enru ethai koorukireerkal? 25-Dec-2013 10:45 am
எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை மனதில் கொண்டு ... 25-Dec-2013 9:15 am
தோழி ஏன் எடுக்க குடாதுன்னு சொல்றிங்க 24-Dec-2013 11:42 am
உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Dec-2013 10:19 pm

மலையில்

இருந்தே விழும்

நதியின் பிராவகம்

எங்கே தோன்றியது

என்றே எவராலும்

எடுத்தே இயம்பிடமுடியுமா ...!!!

பின் ஏன் மனிதர்களே

சாதி

எங்கே தோன்றியது

என்றே அறியாமலே

சாதி சாதி

என்று சொல்லியே

சங்கம் வைத்தே

தமிழை வளர்க்காமலே

சாதியை வளர்ப்பதேனோ ...???

மேலும்

நன்றி தோழி !!! 21-Dec-2013 9:23 pm
நன்றி தோழமையே !!! 21-Dec-2013 9:22 pm
தங்கள் வருகைக்கும் கருத்து பதிப்பிற்கும் நன்றி சகோதரியே !!! 21-Dec-2013 9:21 pm
முற்காலத்தில் அவரவர் செய்கின்ற தொழிலை வைத்தே இந்த சாதிகள் எல்லாம் பிறந்தது. வணிகம் செய்பவர் செட்டியார், மரச் சாமான்கள் செய்பவர் தச்சர், தென்னை பனை மரம் ஏறுபவர்கள் சானார் என்று இப்படி செய்யப்பட தொழில்களே சாதி முத்திரையும் அவர்களுக்கு அளித்துவிட்டது. வேறு வேறு தொழிலுக்கு மனிதர்கள் மாறிவிட்டாலும் இந்த சாதி மட்டும் இன்னும் மாறாமல் ஒழிக்கப் படாமல் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம். படைப்பு நன்று தோழி. 21-Dec-2013 2:29 pm
lakshmi777 அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2013 7:09 pm

உங்கள் அத்தையோட பொண்ணோட கணவர் தங்கையோட பையன் உங்களுக்கு என்ன உறவுமுறை ?

மேலும்

மருமகன் 20-Dec-2013 11:58 am
இந்த கேள்வியை படிப்பவர் ஆணாக இருந்தால் மருமகன்.. பெண்ணாக இருந்தால் மகன்... 20-Dec-2013 10:47 am
மகன்(தங்கச்சி மகன்) 20-Dec-2013 10:44 am
மாப்பி.. 20-Dec-2013 10:40 am
thozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2013 7:42 pm

ஒரு ரோஜா
செடியில் கண்டேன்,
முள்ளின் வலிமை என்னவென்று....

ஒரு பாயும்
சிறுத்தையில் கண்டேன்,
காலின் வலிமை என்னவென்று....

ஒரு ஓவியனின்
ஓவியத்தில் கண்டேன்,
கரத்தின் வலிமை என்னவென்று....

ஒரு பறக்கும்
கழுகில் கண்டேன்,
பார்வையின் வலிமை என்னவென்று....

ஒரு அழகிய
பூஞ்சோலையில் கண்டேன்,
இயற்கையின் வலிமை என்னவென்று....

ஒரு விளையாட்டு
வீரனில் கண்டேன்,
விடாமுயற்சியின் வலிமை என்னவென்று....

உனது அழகிய
நட்பில் கண்டேன்,
இறைவனின் வலிமை என்னவென்று....

மேலும்

நன்றி 20-Dec-2013 12:42 pm
@Beni :) இக்கவிதையில் கண்டேன் உனது வலிமையை தோழி.!! சிறப்பு படைப்பு.!!! 20-Dec-2013 10:48 am
ம்ம்ம்ம்.... நன்றி நண்பா 19-Dec-2013 9:52 pm
நட்பின் வலிமை பெரிது..! 19-Dec-2013 8:20 pm
thozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2013 10:09 pm

கண்ணுக்கு காவலாய்
இமை இருக்க,

பாதத்துக்கு காவலாய்
செருப்பு இருக்க,

ஏன் இறைவா,

மனதுக்கு காவலாய்
பூட்டு போடவில்லை நீ .....

சிந்தனையை வெளிபடுத்த
வார்த்தை தந்தாய்,

அன்பை வெளிபடுத்த
இதயம் தந்தாய்,

ஏன் இறைவா,

அன்பிற்கு ஒரு
எல்லை தரவில்லை ....

மேலும்

நன்றி 18-Dec-2013 10:55 am
அன்பிற்கு எல்லை ஏது!!!நன்று 17-Dec-2013 6:40 pm
இது நீங்கள் சொல்வது உண்மை...! 17-Dec-2013 6:35 pm
ம்ம்ம் 17-Dec-2013 5:11 pm
thozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2013 8:13 pm

எடுத்து சொல்ல நாவு உண்டு,
சொல்ல வேற வார்த்தை இல்லை,
வார்த்தையின் அர்த்தம் தேட,
என்னிடத்தில் ஓர் அகராதி இல்லை......

சொல்ல என்றும் தேவை இல்லை,
வயது என்னும் வாழ்வின் எல்லை,
நாவு கூட வாழ்த்து சொல்லும்,
நீ சொன்ன நல்ல வார்த்தைக்காக ......

பேசும் முன்னால், யோசி நன்றாய்,
யோசனை என்றும் வெற்றி தருமே,
வெற்றி என்னும் பரிசை பெற்று,
வெல்ல வேண்டும் அனைவர் மனதை.....

பேசிய பின் யோசிக்காதே,
யோசிப்பது பயன் இல்லையே,
பேசியது தவறானால்,
அதுவும் கூட நோவின் வலியே......

வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு,
வெல்ல வேண்டும் மனங்களையே,
என்றும் யோசி பேசும் முன்னால்,
வாழ்க்கை என்றும் செழித்து ஓங்கும்...

மேலும்

நன்றி நண்பா 16-Dec-2013 10:17 pm
ம்ம்ம் (இருப்பா யோசிக்கிறேன் ) ம்ம்ம்ம்ம்ம்ம் (ம்ம் யோசிச்து விட்டேன்) நல்லா, அழகான அறிவுரை.. தெளிவான கவிதை. அருமை தோழி 16-Dec-2013 10:16 pm
நன்றி நண்பா 16-Dec-2013 10:00 pm
நல்ல அறிவுரை தோழி 16-Dec-2013 9:40 pm
thozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 1:43 pm

உன் பேச்சில்
கண்டேன்,
கட்டபொம்மனை....

உன் வீரத்தில்
கண்டேன்,
சத்ரபதி சிவாஜியை....

உன் அறிவில்
கண்டேன்,
அப்துல் கலாமை....

உன் எழுத்தில்
கண்டேன்,
கண்ணதாசனை....

உன் எண்ணத்தில்
கண்டேன்,
திருவள்ளுவரை....

உன் கொடையில்
கண்டேன்,
பாரி வள்ளலை....

இத்தனை பேரையும் கண்டும்,
இன்னும் காணவில்லையே,
இறைவனை உனக்குள் ....

தேடி பார்,
மாறும்
உன் சிந்தனை முழுதும்....

மனிதனாய் வாழ ஆசைப்படு,
இறைவன் உனக்குள் வெளிப்படுவார்,
மகிழ்ச்சி என்றும் பொங்கிடுமே .....

மேலும்

நன்றி .... 15-Dec-2013 4:59 pm
நம்முள் இருப்பவனை நாம் கானமுடியாமல் எங்கெங்கே தேடுகிறோம்.வேதம் சொல்வதும் இதைத் தான்: தத் வம் அஸி. நன்று தோழி 15-Dec-2013 4:58 pm
நன்றி 15-Dec-2013 4:56 pm
அருமை தோழியே 15-Dec-2013 4:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (96)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (96)

இவரை பின்தொடர்பவர்கள் (96)

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே