ஒரு ஊருல ஒரு முயலும் ஒரு ஆமையும் இருந்துச்சாம்

ஓடிப் போன போது
ஒடன்சே போனது காலு
ஐயோ பாவம் மொயலு
அதுக்கு போடணும் மருந்து...!
அழைச்சிப் போறது ஆரு ?
அறிவால் நீயும் பாரு.....!
வெற்றி தோல்வியா தேவை ? இங்கே
விட்டுக் கொடுப்பதே வாழ்க்கை...!
நீயும் நானும் இதைப் புரிந்தால் மண்ணில்
நிகழும் தெய்வீக லீலை....!