காதல்
என்னவளே
உன்னைக் கண்ட நாள் முதல்
என் மனம் சுய நினைவை இழக்கிறது
சுயம்பாய் உன் நினைவே உதிக்கிறது
என் மனதில் !...
கார்த்திகையில் உனை நான் கண்டேன்
உனை கண்டு பேசிய நாள் முதல் - என்
நித்திரையை நான் தொலைத்தேன் - ஓரிரு
நாட்கள்தானா என்று நினைத்தேன் - ஆனால்
சித்திரை வரை தொடருதே இதுவும் -
ஒரு ஆனந்தமே என்று சந்தோசத்தை தொடர்ந்தேன்!
எனக்கு நீ என எழுதியவன் -
உன்னை தாமதமாக ஏன் படைத்து
என கண்ணில் காட்டினானோ - சில
காலங்களை தொலைத்தேன்
உன்னை காணாதவரை !...
நன்றி சொல்வேன் - உன்னையும்
என்னையும் படைத்தவர்களுக்கும் -
பக்கத்து வீட்டுக்கார அண்ணனுக்கும்
உன்னை என் கண்ணில் காட்டியமைக்கு !...
குளிர் காலம்தான் இது - மின்விசிறியும் மேலே வேகமாகத்தான் சுழல்கிறது
எனக்கு ஏனோ குளிரவுமில்லை !
கோடைக்காலம்தான் அது
இறுக்கி போர்த்திக் கொண்டாலும்
எனக்கு ஏனோ வியர்க்க்கவுமில்லை ! காரணம் ?
இதமாகவும் - பதமாகவும்
உன் நினைவுகள் - என்
இதயத்தில் உலாவுகிறதே !...
அன்புடன் ...