உண்மையான காதலோடு உலவும் ஆண்களுக்கு மட்டும்

ஒரு அணும் பெண்ணும் ஒரே ஊரில்
வாழ்ந்தார்கள். அந்த ஆண் அந்த
பெண்ணின் மீது காதல் கொண்டு தன்
விருப்பத்தை தெரிவிக்க அவனும்
உடனேயே ஏற்றுக்கொண்டான்...!
இருவரும் கதைக்கும்
போது அடிக்கடி அந்த ஆண்
சொல்லுவான் என் இதயம் என்னிடம்
இல்லை.அது எப்பொழுதும்
உன்னுடனேயே இருக்கும் என
கூறுவான்.
சிலவருடங்கள்
கழியவே வெளிநாட்டு மோகம் கொண்ட
அந்த காதலன் ''உன்னை என்னால்
திருமணம் செய்ய முடியாது. எனக்கும்
லண்டனில படிச்சு அங்கயே பெரிய
உத்தியோகத்துல இருக்குற என்னோட
அத்தை பொண்ணுக்கும்
நிச்சயமாயிடுச்சு. ரெண்டு மாசம்
கழிச்சு ஊர்ல இருக்குற அம்மன்
கோவில்ல கல்யாணம் நடக்க
போகுது. என்னை மறந்துடு''
நு சொல்லிற்று போயிட்டான்...!
ரெண்டு மாசம் கழிச்சு அவன் சொன்ன
மாதிரியே அவனுக்கும் அவன்ட
அத்தை பொண்ணுக்கும் கல்யாணம்
நடந்திச்சு. கல்யாணம்
நடந்து ரெண்டு நாளால தனக்கு வந்த
பரிசுப்பொருட்கள்ல ஒன்ன
பிரிச்சு பார்த்த உடனே ஓ
என்று கத்தி அழுதான்.
அந்த பரிசு,
இரத்தம் நிரப்பப்பட்ட
ஒரு கண்ணாடி ஜாடியில் இதயம்
துடித்துக் கொண்டிருந்தது. ஜாடியின்
மூடியில் ''ஏய் முட்டாள்!!! உன்
இதயம்
என்னிடமல்லவா இருக்குறது...
உன்
மனைவிக்கு எதை கொடுப்பாய்...??
?'' என்று எழுதப்பட்ட தாள்
ஒன்றூ இணைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது தான் அவன் உண்மையான
காதல் எது என்பதையும் தான்
மன்னிக்க முடியாத துரோகம்
செய்து விட்டதாகவும்
வருந்தினான்...!

எழுதியவர் : m.palani samy (16-Dec-13, 9:27 am)
பார்வை : 277

மேலே