தூரத்துப் பச்சைகள்

கோலமிட்ட குடிசையது
கோவிலாகத் தோன்றுமடா...!
மாளிகையில் இருளிருந்தால்
மனம்விரும்ப இயலுமாடா ?...
இல்லாததின் சுகத்தைவிட
இருப்பதில் அதிகம் இருக்குதடா
இதை நீ புரிந்து கொண்டால்
இன்னல் வாழ்வில் இல்லையடா...!
சரி.......
எது இருப்பது ?
எது இல்லாதது ?
நிலையில்லாமையை தவிர்க்கும் மனம்
இருப்பது
நிலையில்லாமையை விரும்பும் மனம்
இல்லாதது