ஆனை முகனே----ஸ்ரீ கணேசா---

கர்வம் உடைந்தால் இனிமைஎன்ற
கருத்திற்காய் விடலை போட்டேன்
கண்ணீரும் இனிமையோ ? தேங்
காயே நின் காயம் உடைந்ததோ ?!
செடிக்கும் உயிர் இருக்குமாயின் - இந்தச்
சித்ரவதையால் அது வலித்திருக்குமே...!
ஆனை முகரே சொல்லுமையா இது
அதிகப் பிரசங்க சிந்தனையோ ?!
அருள் வழங்க வேண்டுகிறேன்
அங்கே உடைந்த தேங்காய் முக்தி பெறட்டும்...!!!