விழித்துக் கொண்ட காதலன்

என்னையும் காதலித்தாள் ஒருத்தி
மெய்குளிர்ந்து போனேன்
மைவிழியாள் அழகில்!
பேச்சு வாக்கில் ஒருநாள்
என் சாதியைத் தெரிந்து கொண்டாள்:
“நான் வேறு; நீ வேறு
நமக்கிது சரிப்படாது” என்று சொல்லி
நடையைக் கட்டிவிட்டாள்.
நன்றி சொல்வேன் அவளுக்கு:
“என்னை காதல் இளவரன் ஆகிடாமல்
காப்பாற்றியதற்கு நன்றி!”.
சாதி கடந்து நிற்கும் பெண்ணொருத்தி
எங்காவது இருப்பாள் எனக்காக.
முறைப்படி பேசிமுடித்து அவளை
ஏற்பேன் வாழ்க்கைத் துணையாய்.
கண்டவளின் காதலுக்கு
இனிமேல் கைகொடுக்க
நானென்ன இளிச்சவாயானா?

எழுதியவர் : புதுவை தமிழ் (17-Dec-13, 8:44 am)
பார்வை : 270

மேலே