வளர் பிறை-17

உயிர் பயம் தாங்காமல் உண்மையை சொல்ல தயாரானான் செல்வம்,,,,,,,,,

"நான் ஒரு டாக்ஸி டிரைவர் ஆனா அதுல எனக்கு போதுமான வருமானம் வரல,,,, நான் அதிகம் படிக்கல வேற தொழிலும் தெரியாது,,,,,

இந்த தினகரன் எனக்கு சின்ன வயசுலேந்து friend,,, ஒரு நாள் நான் இவன பார்த்தேன்,,,,, அவன்கிட்ட என் நிலமைய சொன்னேன்

அதுக்கு அவன்," டேய் செல்வா நான் உன்ன ஒரு எடத்துக்கு கூட்டிட்டு போறேன் அங்கே உனக்கு வேலை வாங்கி தரேன்,,,,, டிரைவர் வேல தான் செய்றியா"-ன்னா,,,,,,,,,, நானும் ஒத்துகிட்டேன்

அங்கே போனதுக்கு அப்புறம் தான் அது என்ன மாதிரி தொழில்னு எனக்கு தெரிஞ்சிது

ஸ்கூல், காலேஜ் பொண்ணுங்கள கடத்திட்டு வந்து அவங்கள மயக்க படுத்தி ஆபாசமா படம் எடுத்து அதை இன்டர்நெட்-ல விட்டு சம்பத்திச்சாங்க

முதல எனக்கு இதுல விருப்பம் இல்ல ஆனா என் வறுமை என்ன அப்படி செய்ய வச்சுது,,,,,, கொஞ்ச நாள்ல எனக்கு இந்த தொழில் பழகி போச்சு

என்னோட வேலை என் டாக்ஸில ஏறுற பொண்ணுகள மயக்க படுத்தி அவங்க எடத்துக்கு கொண்டு போகணும் ,,,,,,, அவ்வளவோ தான்,,,, இதுக்கு நிறைய பணம் குடுப்பாங்க"- தான் இத்தனை நாளாக செய்து வந்த தொழிலை பற்றி சொல்லி முடித்தான் செல்வம்

அதற்குள் அவனுக்கு போட்ட விஷ ஊசி தான் வேலையை ஆரம்பித்து இருந்தது,,,,,,, அதனால் அவனுக்கு மூச்சு இரைத்தது,,,,,,

அடிக்கடி இரும்பவும் செய்தான்,,,,,,,

பின் மறுபடியும் தான் வாக்கு மூலத்தை ஆரம்பித்தான்,,,,,,,, "பொண்ணுகள படம் எடுக்குறதோட சரி எந்த பொன்னையும் நாங்க கொலை செஞ்சதில்லை "

"அப்போ ஜெனிய கொன்னது யாரு??"- கேட்டான் ரகு

"அன்னைக்கு அந்த பொண்ணு ஜெனி அவங்க அண்ணனுக்காக காத்து கிட்டிருந்துச்சு,,,, அப்போ அந்த ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் பையன் கணேஷ் வந்தாரு,,, அவர் கூட இன்னோருத்தரும் வந்தாரு,,,,,"- அந்த நாளின் விபரிதத்தை சொன்னான் செல்வம்,,,,,, அவன் சொல்ல சொல்ல அனைவரின் மனத்திரையில் காட்சிகள் நகர்ந்தன


"வாங்க தம்பி என்ன இவ்வளோ தூரம்,"- கணேஷை கேட்டான் தினகரன்

"சும்மா தான் உங்கள பாக்கலாம்னு ,,,,, ம்ம்ம் அப்பறம் இது என் friend இவரும் நாம தொழிலில் ஒரு பர்ட்னெர் தான்"

"ஒ அப்படியா"- கை குலுக்கினார்கள் இருவரும்

"ஓகே நாம பிஸ்னெஸ் எப்படி போகுது"

"ம்ம்ம் ரொம்ப நல்லா போகுது,,,,,,, அது மட்டும் இல்ல நமக்கு க்ளைன்ட்சும் அதிக மாயிடாங்க"

"தினகரன் உங்ககிட்ட இன்னோர் விஷயம் சொல்லணும்,,,,,, அது வந்து,,,,,,, அது எனக்காக நீங்க செஞ்சி தருவீங்களா"- தயக்கத்தோடு பேசினான் கணேஷ்

"சொல்லுங்க சார்,,,, என்ன செய்யணும்"

"இந்த ஸ்கூல்ல உள்ள ஸ்டுடென்ஸ்க்கு drug கொடுக்கணும்"

"என்ன சார் சொல்லுரீங்க,,,, ஸ்டுடென்ட்ஸ்க்கு drug -ஆ "

"ஆமா தினகரன் இப்போ நாமா பண்ற பிஸ்னெஸ்க்கும் இது ஹெல்ப் பா இருக்கும் "

"இதுல நான் என்ன சார் பண்ண முடியும் "

"நம்ம ஸ்கூல்ல sutdent -க்கு உங்க மூலம்தான் 1st drug consumation பண்ண போறேன் "- சாதாரமாக ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான் கணேஷ்


"எப்படி சார்"

"இங்க பாருங்க"- ஒரு சாக்லேட் பாக்ஸ்-ஐ காட்டினான்,,,,,,

"இதுல drug கலந்துருக்கு இத நாளைக்கு உங்க பர்த் டே ஸ்வீட்னு சொல்லி நீங்க போற கிளாஸ் ஸ்டுடென்ட் கெல்லாம் கொடுக்கணும்,,,,,, அடுத்த தடவ அவங்களாவே இந்த சாக்லேட்-ஐ தேடி வருவாங்க"- தன கொருர திட்டத்தை கூறினான் கணேஷ்



அப்போது ,,,,,,,,,,

"டமார்,,,,,,,,,,,,,,,,,,,,"- கதவை இடித்த சத்தம் கேட்டது


மூவரும் அதிர்ந்து நின்றனர்,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : நிலா மகள் (17-Dec-13, 10:52 am)
பார்வை : 194

மேலே