கண்ணீர் தேசம்
காவிரியில் இல்லையடி தண்ணீர்
எங்கள் கண்களில் ஓடுதடி கண்ணீர்
வேலை இல்லை விடியவில்லை
விடி வெள்ளி தோன்ற வில்லை
வேங்கை போல் இருந்த மக்கள்
வேதனையில் வாழ்கின்றோம்
காவல் நிலையம் எத்தனையோ
காணவில்லை சந்தோசம்
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
காஸ்மீரில் பயங்கரவாதம்
கண்டவர் கண்களில் கண்ணீர்
ஈழத்தமிழர் படுகொலை
இந்தியா முழுவதும் கண்ணீர்
எதிர்கால ஒளி விளக்கு
எரிந்ததோ நூற்றுக்கணக்கு
குடிசையில் பள்ளி எதற்கு
குழந்தைகள் பழி அதற்க்கு
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
கண்ணீர் எங்கும் ஒழுகுதடி - அதில்
கலவர கப்பல் ஓடுதடி
இன்றைய இளங்கரே…
இளய சமுதாயமே …
விரைந்து வா
கண்ணீரை துடைத்து
கவலை மறந்து
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்