கன்றுகளே கன்றுகளே

கன்றுகளே கன்றுகளே
கண்ணன் எங்கே போனானோ,
காணாது தவிக்கிறேன்
ஒரு நாள் முழுவதும் ...
அவன் வந்தவுடன்
என்னை விளியுங்கள்
அவன் வடிவம்
கண்டு கொள்கிறேன்...
அதற்கு நான்
என்ன தர வேண்டும்
கேளுங்கள் கண்டிப்பாக
தந்து விடுகிறேன் ...
-சு. சுடலைமணி