நட்புக்கும் கற்புண்டு

நட்பும் காதலும் பாலில் வேற்றுமை
கற்பில் இரண்டும் பேணும் ஒற்றுமை.
இருபால் அன்பில் இணைவது காதல்
ஒருபால் அன்பில் உறைவது நட்பு.

தூய்மை தானது தொடரும் உறவு.
வாய்மை தானது வளரும் அன்பு,
உறவும் அன்பும் உணர்ந்து துடிப்பது.
துடித்து உயிரில் கலந்து பிறப்பது.

நட்பின் ஏமாற்றம் நஞ்சுண்டது போலாகி
தொண்டைக் குழியில் நின்றும் முள்ளாகி
விக்கவும் கக்கவும் இயலாது தானாகி
தொக்கிய துயரமாய் வருத்தும் மேலாகி.

நட்பின் துரோகம் சமாதானம் ஆகாது.
நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறாது
நட்புக்கும் கற்புண்டு என்பதால் தேறாது--
நாசமாகினால் உணர்வுகள் தாங்காது.

உள்ளங்கள் நம்பிய உணர்வுகள் பொருந்திய
உண்மைகள் உயிரில் ஒன்றிக் கலந்திட்ட
நன்றிகள் நட்பில் நடுநிலை தவறியும்
கள்ளமானால் நட்பது வாழாது.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (27-Dec-13, 2:08 pm)
பார்வை : 963

மேலே