கும்கி - நாகூர் கவி
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை தெரிகிறதா...?
என் பெயர் தான்
வாகனம்... !
என்னை
இயக்கும் இயக்குனராக
பெட்ரோலியம் இருந்தாலும்
என்னை தினம்
இயக்குபவன்
நீதானே மானிடா... ?
உன்னையும்
உன் சுமைகளையும்
சுமக்கும் என்னை
காலால் உதைக்கிறாயே
இதுதானோ உன் பண்பு...?
உன்னை
அப்படியும் சுமப்பேனே
அதுதானே என் அன்பு... !
நீ செல்ல
நான் விரைகிறேன்
நீ பயணிக்க
நான் தேய்கிறேன்... !
உன் இறக்கைகள்
நான் தானே...?
உன் இருக்கைகள்
யாம் தானே... ?
சாலை வளைவுகளோ
வந்துவிட்டால்
உரக்க சப்தம்
போட்டு சொல்வேனே... ?
கூட்ட நெரிசல்களில் நீ
சிக்கிக் கொண்டால்
உனக்காக கோஷம்
போட்டு செல்வேனே... ?
என் கட்டழகு
கால்கள் இரண்டையும்
சாணி மிதிக்க வைப்பாயே.. !
எந்தன் மேலே நீ
அமர்ந்தால்
வீதியில் தினமும்
சினிமா
ஹீரோப் போல மின்னுவாய்... !
ஒரு நாள் எனக்கு
உடல்நிலை மோசமானால்
என்னை
ஜீரோப் போல எண்ணுவாய்...!
வெயில் புயல்
மழை வெள்ளம்
பனி பாராமல்
உன்னை சுமந்தேன்... !
உன்னாலே
தேய்ந்து தேய்ந்து
என் உடல் உறுப்புகள்
சோர்ந்து போயின... !
உன்னாலே நான்
முதுமையானேன்
என்னாலே நீ
புதுமையானாய்... !
எந்தன் சேவை
இனி உனக்கு
தேவையில்லையா...?
அதனாலே
என்னை நீயும்
விற்க போறீயா...?
என்னை மாற்றி
என்னை மாட்டி
விற்றிடுவான் இன்னொருத்தன்... !
வாழையடி வாழையாக
தொடரும் பயணம்
மேற்கொள்வேன்...!