புது வருடப் பிறப்பு 2014

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2014


புத்தம் புதிய வாசம் வீசும் வண்ண மலர் பூத்துவிடும் நாளை
நித்தம் பசியால் வாடி கண்ணீரோடு வாழ்வை ந(க)டத்திய ஏழை
யுத்தம் நடத்தி செத்துப்பிளைத்த ஏழை நிமிர்த்தட்டும் தோளை
ரத்தம் கசிய வியர்வை சிந்தி உழைத்த தோளில் விழட்டும் மாலை

வீதிகளில் மீசை வைத்த குழந்தைகள் இல்லாமல் போகட்டும்
சாதிகளில் ஆசை( வெறி) பிடித்த மானுடம் அடியோடு சாகட்டும்
இங்கே கையேந்தி வாழ்வை போக்கும் அவலநிலை தீயோடு வேகட்டும்
எங்கே வியர்வை கசிகிறதோ, மூளை கசக்கப்படுகிறதோ அங்கே
திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டட்டும் .************************தன்னம்பிக்கையுடன்.சிங்கை கார்முகிலன் .

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (1-Jan-14, 9:35 am)
பார்வை : 144

மேலே