இடலி வரும் தோசை வரும் கானா பாடல்
இரவும் வரும் பகலும் வரும் பாடல் நகல்
இட்லி வரும் தோசை வரும்
மாவு ஒன்று தான். . .
இடியாப்பம் வரும் புட்டும் வரும்
அரிசி ஒன்று தான். .அரிசி ஒன்று தான் . .
கனவும் வரும் குறட்டை வரும்
உறக்கம் ஒன்றுதான்
மூட்டைப் பூச்சி வரும் கொசுவும் வரும்
கடிகள் ஒன்று தான் கடிகள் ஒன்று தான். .
பஸ்சும் வரும் காரும் வரும்
ரோடு ரோடு ஒன்று தான் -- நீ
போகும்போது ரைட்டுல போனா
முதுகுல டின்னுதான் முதுகுல டின்னுதான். .
கங்கை நதி காவிரியும் பாயும் நாடு தான் -அதை
பிரித்து வைத்து பார்ப்பதுவும் மனிதம் ஒனறு தான்
இதை நான் பாடுவதும் பாடாததும்
இரண்டும் ஒன்று தான். . இரண்டும் ஒன்று தான் !