இறந்தபின்பாவது

நீ கிடைப்பதற்கு யுத்தம் ஏதும் செய்யவில்லை
இருந்தாலும் போர்க்கள அம்புகள் என் மார்பில்....
உனக்காக தவம் ஏதும் செய்யவில்லை
இருந்தாலும் சாபங்களின் சாயல் என் தோளில்...
உன்னோடு வாழ்வதற்கு வழியேதும் இல்லை
இருந்தாலும் வலிகளின் ஓதம் என் நெஞ்சில்....
உன் பின்னோடு வருவதற்கு தடையேதும் இல்லை
இருந்தாலும் மண்ணோடு மடிவதற்கே விரும்பும் என்விழிகள்.....
ஏன் எனில்...
நான் இறந்தபின்பவது...
இறக்கம்
கொள்ளுமா உன்மனது?
இறங்கி கொல்லுமா
உன் நினைவு?

எழுதியவர் : மோகி (9-Jan-14, 7:42 pm)
சேர்த்தது : Mohanambal
Tanglish : iranthapinbaavathu
பார்வை : 91

புதிய படைப்புகள்

மேலே