ஏக்கம்

வாழ்க்கைப்பாதையில்
பயணிக்க ஆரம்பித்தோம் ஒன்றாய்
நீயோ என்னை பார்க்க மறுக்கிறாய்
நானோ உன்னை பார்க்க மட்டுமே வாழ்கிறேன்!!

எட்ட நின்று தொட்டு பேச முடியாத தவிப்பில்
என் உணர்வுகளை நானே கொன்று புதைக்கிறேன்!!

பாறையாய் மனம் கொண்ட மலைகளை கூட மேகம் தீண்டுகிறதே
மென்மையான மனம் கொண்ட என்னை நீ தவிக்க விடுவது ஏன்?

காத்திருக்கிறேன் என்று அறிந்தும் – என்னை
பிரித்து நிற்கிறாய் தனித்து தவிக்க வைக்கிறாய்

முள்ளுக்குள் சிக்கி தவிக்கும் ரோஜாவை போல
உன் நினைவிற்குள் சிக்கி தவிக்கிறேன்

பஞ்சபூதங்களையும் ரசித்து பார்க்கிறேன் – அதில்
உனக்கு இணையென ஏதுமில்லை
என எண்ணி உணர்த்து மகிழ்கிறேன்

வார்த்தையில் சொல்ல முடியாத தவிப்பு
உனக்கென்ன என் மனதின் ஆழத்தில்
உண்டென எண்ணி உணர்கிறேன்

என் விழிகள் பேசும் மொழி புரியவில்லையா?
என் இதயம் சொல்லும் வார்த்தை அறியவில்லையா?

ஏன் இந்த வாழ்வென்று என்னும் முன் வந்துவிடு
வந்து வாழ்வின் வசந்தத்தை மீட்டுகொடு!!!

எழுதியவர் : (9-Jan-14, 9:06 pm)
Tanglish : aekkam
பார்வை : 198

மேலே