தமிழுலகம் பொங்கல்விழா கவிதை போட்டி

" பிரபஞ்சத்தின் பிணைப்பில் சுழல்கிறது உலகம் ..!!
தமிழர்களின் பிணைப்பிற்கு செய்திடுவோம்-தமிழுலகம் " ..!!

நமது மொழி, நமது இனம், நமது கலாச்சாரம் கொண்டு ..!!
அதில் அன்பையும் சகோதரத்துவத்தையும் சேர்த்துக்கொண்டு ..!!
-செய்திடுவோம் தமிழுலகம் ..!!

உலகின் எக்கோடியில் இருந்தாலும் ..!!
என் தமிழனும் என் தமிழச்சியும் ..!! தமிழில் மட்டுமே பேசும்போது - தமிழர்கள் ஒன்றுபடுகின்றோம் ..!!

முகம் தெரியாத தமிழர்கள் மொழியால் கைகோர்த்து ..!!
அயல்நாட்டவர் முன் நடக்கும் போது ..!!
-தமிழர்கள் ஒன்றுபடுன்கிறோம் ..!!

தன் தாய் நாட்டில் தமிழில் பயிலவிட்டலும் ..!!
வெளிநாட்டில் சாதனை விழாவில் ..!!
தமிழில் நன்றி சொல்லும்போது ..!!
-தமிழர்கள் ஒன்றுபடுகின்றோம் ..!!

என் தமிழ் தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள் ..!!
நம் சந்ததியினருக்கு தாய்பாலில் ..!!
தமிழுணர்வை கலந்து ஊட்டுங்கள் ..!! - அப்போதுதான் ..
உலகின் எந்த மூலையில் தமிழன் அடி வாங்கினாலும் ..!!
தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழனுக்கு வலிக்கும் ..!!

நமது ஒற்றுமை உலகிருக்கு புலப்படும் ..!!
நமது தன்மானம் காக்கப்படும் ..!! தமிழர்கள் ஒன்றுபடுவோம் ..!!தமிழ் சந்ததியை உருவாக்குவோம் ..!!

தமிழுலகம் செய்வோம் - தமிழுக்காய் வாழ்வோம் ..!!


--------------------------சுதா ரெங்கநாதன்

எழுதியவர் : Sudharenganathan 10-Jan-2014 (11-Jan-14, 8:50 am)
பார்வை : 68

மேலே