யார் விதித்தார்

தன்னையே சுற்றும் பூமி
தானே எரிந்துகொள்ளும் சூரியன்
கருமையாய் இரவும்
பிரகசமாய் பகலும்
சுகம்தரும் வசந்தம்
நடுங்கவைக்கும் குளிர்
பிறப்பும் இறப்பும்
திரும்பத் திரும்ப
நடப்பதால் அது விதி

மதிக்கு திரையிடும் விதியை
மனிதா!
உனக்கு யார் விதித்தது ?

எழுதியவர் : thanam (12-Jan-14, 12:27 am)
சேர்த்தது : தில்லை நாதன்
பார்வை : 69

மேலே