என்னவென்று புரியல

உதயனின் நேசம் இல்லாதபோது
உறைபனியாகும் நீரது உறுதி
இதயத்தில்உன் நேசம் இல்லாதபோது
உறைந்து போகுதேன் குருதி

புல்வழியில் பாயும் புனல்
பளபளவென மின்னும்-அவள்
கயல்விழியில் விடியும் தினம்
நாளெல்லாம் மின்னும்....

நீரில்லா செடியது
நிலம்வீழ்ந்து போவதுபோல்-உன்
நினைவுகள் நீங்கும்போது
நிலையிழந்து போகுதேன் மனம்

இதழில் கதையெழுதி
இளந்தேன் உறியுது
எங்கிருந்தோ வந்த
பட்டத்து பூச்சி...

இல்லாத கவியெழுதி
இளமையாய் வழியுது
எப்போதும் என்முன்-உன்
புகைப்பட காட்சி...

எழுதியவர் : காசி. தங்கராசு (13-Jan-14, 2:53 am)
Tanglish : ennavendru puriyala
பார்வை : 107

மேலே