ஈரோடு தமிழன்பன் விருது-80 பெறும் தோழமைகளுக்கு வாழ்த்துகள்
தோழமை நெஞ்சங்களே...
வணக்கம்...
இன்று காணும் பொங்கல்...
நம்மில் பெரியவர்கள் நமது வளர்ச்சியை கண்டு வாழ்த்தும் நாள்...இவ்வகையில் இன்று ஓர் அறிவிப்பு...
பாரதியார்....பாரதிதாசன்....என்பவர்க்குப் பின் தமிழின் ஆகச்சிறந்த மகா கவி நிலையடைந்த ஒருவர் தான் ஈரோடு தமிழன்பன்...முதுபெரும் தமிழ்த் திறனாய்வாளர் கா.சிவத்தம்பி இதனை பதிவு செய்துள்ளார்..இப்படி..."சமநிலைக் கவிஞர்களுள் முதல்நிலைக் கவி(ஈரோடு தமிழன்பன் தேசியக் கருத்தரங்க நிறைவு விழாச் சிறப்புரையில் ) " .....
ச.செந்தில்நாதன் ,கா.நா.சு படைத்த 'திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் 'நூல் மதிப்புரையில் இப்படி குறிப்பிட்டுள்ளார்--
" மகாகவி என இன்று கருதத்தக்கவர் ஈரோடு தமிழன்பன் "...
'தமிழன்பன் படைப்பும் பார்வையும் 'எனும் நூலில் கோவை ஞானி இப்படி எழுதியுள்ளார்--
"ஈரோடு தமிழன்பன் மாகா கவி நிலையை நெருங்கிவிட்டார் "
" ஈரோடு தமிழன்பன் படைத்த 'வணக்கம் வள்ளுவ 'எனும் (சாகித்திய அகதெமி விருது வென்ற நூல் )நூலிலே வள்ளுவ யாப்பாம் குறள் வெண்பா குறித்து அவர் எழுதிய எழுத்துகள் ,சிந்தித்த கருத்துகள் இதுவரை தமிழ் வரலாற்றில் எவரும் சிந்திக்காதவை ...." -என முனைவர் யா. மணிக்கண்டன் தமிழன்பனின் அண்மை வெளியிடான' மழை மொக்குகள் 'எனும் நூலில் தனது ஆய்வுரையில் எழுதியுள்ளார்.....
80-ல் 70-ஐ தொடுபவர் தமிழன்பன்....!!!! ஆம் ,80 அகவையில் 70 நூல்களுக்கு சொந்தக்காரர் இவர்...!!!அதுவும் பல புதிய வகைகளை நமக்கு அளிப்பவர்...மரபுக்கவிதை , ,புதுக்கவிதை ,வசன கவிதை ,கவியரங்கக்கவிதை ,ஐக்கூ ,சென்ட்ரியு ,லிமரைக்கூ,கஜல்,,நாடகம்,திரைப்படப் பாடல்கள் ,ஆராய்ச்சி கட்டுரைகள்,புனைகதை ,சிறுவர் பாடல்கள்...என பன்முக படைப்புகளை இன்றும் தொடர்ந்து அளித்து வருபவர்..
இத்தகு தகைசால் தமிழ் படைப்பாளியின் பல படைப்புகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன...
இவரின் 80ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியென இவரின் பெயரால் ஊக்குவிப்பு விருதளிக்க திட்டம் இயற்றியுள்ளோம்....தமிழக அளவிலும் உலகளாவிய அளவிலும் 80 படைப்பாளிகள் தமிழன்பன் 80 எனும் விருது பெற உள்ளனர்.....
இவ்வகையில் தளத்தின் படைப்பாளிகள் சிலரை தெரிவு செய்துள்ளோம்..இத் தெரிவு குறித்த முனைப்பில் அண்மையில் தளத்தில் விருது பெற்ற பல விருதாளர்களின் கருத்துகளும் தனி விடுகை மூலம் பெறப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது ...
விழாக் குழுவிற்கு விருதுக்காக நான் பரிந்துரை செய்யும் நமது தோழர்கள் இவர்கள்...என அறிக...
விருது பெற வாழ்த்துவோம் வாருங்கள்...
தோழர்கள்...
1.ராஜேஷ் குமார் (இணையதள தமிழ்ச் சேவைக்காக )
2.பொள்ளாச்சி அபி
3.காளியப்பன் எசக்கியேல்
4.கிரிகாசன்
5.கொ.பெ.பி.அய்யா.
6.ஜோசப் ஜூலியஸ்
7.ரமெஷாலாம்
8.பிரேமா பிரபா
9.கலை ஞானகுமார்
10.ரொஷான் எ ஜிப்ரி
11.கவிஜி
12.சரவணா
13.அகமது அலி
14.நிலா சூரியன்
15.சிந்தா மத்தார்
16.ஹூஜ்ஜா
17.வினோத் கண்ணன்
18.புலமி அம்பிகா
19.வா. நேரு
20.தமிழ்தாசன்
21.தேவா
22.ஹரி ஹர நாராயணன்..(10000 படைப்புகள் அளித்தவர் )
வருங்காலங்களில் தளத்தின் படைப்பாளர்கள் இன்னும் பலரும் பரிந்துரை செய்யப் படுவர் என அறிக..பலர் உருவாகி வருகின்றனர் என்பது உவகை அளிக்கும் செய்தியாகும்........
அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்...
அகன்